.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Monday, September 12, 2016

சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜூம்மஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது கடற்கரைத் திடலில் நடைபெற்ற புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானோர் இதில் பங்குகொண்டனர். தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் அபூஹனான் ஸலபி அவர்கள் நடாத்தி வைத்தார்கள்.

Sunday, December 1, 2013

Tuesday, October 8, 2013

Friday, September 13, 2013



- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
அபூஹுதைபா, ஸஹ்லா தம்பதிகள் ஸாலிம் என்ற ஒரு சிறுவரைத் தமது வளர்ப்புக் குழந்தையாக வளர்த்து வந்தார்கள். ஸாலிம் என்பவர் அபூஹுதைபாவின் மகன் என்றே அழைக்கப்பட்டு வந்தார். அல்குர்ஆன் இந்த உறவு முறையைத் தடுத்த போது ஸாலிம் இளைஞராக இருந்தார். அவர்கள் ஸஹ்லா அதாவது, அவரது முன்னைய நாள் வளர்ப்புத் தாயார் சாதாரண ஆடையுடன் இருக்கும் போது உள்ளே வந்து செல்வதால் அபூஹுதைபாவின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அது பற்றி ஸஹ்லா (ரழி) அவர்கள் நபி(ச) அவர்களிடம் வினவிய போது ஸாலிமுக்குப் பாலூட்டுமாறும், அதன் மூலம் தாய்-மகன் உறவு ஏற்பட்டுவிடும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். அவரும் அப்படிச் செய்தார் என புஹாரி, முஸ்லிம் உட்பட பல ஹதீஸ் நூற்களில் ஆதாரபூர்வமான ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
கிண்ணியாவில் காணப்பட்ட பிறை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, மற்றும் பெரிய பள்ளி நிர்வாகிகளால் நிராகரிக்கப்பட்டு 9.8.2013 பெருநாளாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நாட்டில் பல பாகங்களிலும் 8.8.2013 ஆம் திகதியன்று பெருநாள் கொண்டாடப்பட்டது. JASM தலைமையகத்திலும், கிளைகளிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தீர்மானத்திற்கு மாற்றமாகப் பெருநாள் கொண்டாடப்பட்டது. இவ்வாறு பெருநாள் கொண்டாடியவர்கள் தவ்பா செய்ய வேண்டும்; விட்டவர்கள் நோன்பைக் கழாச் செய்ய வேண்டும் என பத்வா வழங்கப்பட்டதினாலும் மக்களுக்கு எமது நிலையைத் தெளிவுபடுத்தும் கட்டாயம் இருப்பதினாலும் நடந்தது என்ன என்பது ஒரு வரலாற்றுப் பதிவாக வேண்டும் என்பதினாலும் இது குறித்து இங்கு விரிவாக விபரிக்கப்படுகின்றது.

Friday, August 23, 2013


S.H.M. இஸ்மாயில் ஸலஃபி                                           

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் நவீன தவ்ஹீத்வாதிகள்,  சுலைமான் நபி அவர்கள் தொடர்பாக வரும் ஹதீஸில்  எழுப்பும் மற்றுமொரு (திக) பகுத்தரிவு கேள்வி யாதெனில்,

(ஒருமுறை இறைத்தூதர்) தாவூத்(அலை) அவர்களின் புதல்வர் சுலைமான்(அலை) அவர்கள், 'நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது சுலைமான் (அலை) அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) 'இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்'' என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்'' என்றார். (ஆனால்,) சுலைமான்(அலை) அவர்கள், 'இன்ஷா அல்லாஹ்' என்று கூறிவில்லை; மறந்துவிட்டார்கள். அவ்வாறே சுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை. அந்த ஒரு மனைவியும் (ஒரு புஜமுடைய) அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார். 

Friday, August 9, 2013

"அந்தக் கடிதம் உண்மையானது. அதின் நானே கையொப்பமிட்டேன்!" - கிண்ணியா ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் (நளீமி).
கிண்ணியாவில் பிறை கண்டது உறுதியானதால் 2013-08-08 வியாழன் நோன்பு பெருநாளை கொண்டாடுமாறு கிண்ணியா ஜம்மியத்துல் உலமா வெளியிட்ட கடிதம் போலியானது என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி அவர்களின் குற்றச்சாட்டுக்கு - கிண்ணியா ஜமியதுல் உலமா தலைவர் அஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் (நளீமி) அவர்கள் கிண்ணியா நெட் இற்கு வழங்கிய விளக்கம்!!
முழு விளக்கங்களும் ஊடக அறிக்கையாக வெளியிடப்படும். 

Sunday, August 4, 2013

சாய்ந்தமருது அல்இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசலில் இன்று 04.08.2013ம் திகதி ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முகம்மதிய்யாவின் அனுசரனையுடன் நடைபெற்றது. அதிகமான சகோதரர்கள் இதில் பங்குபற்றினர். அல்ஹம்துலில்லாஹ்.


Sunday, July 21, 2013

N K.அப்துல்லாஹ்

இஸ்லாத்தின் அடிப்படைகள் குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸும், இவ்விரு அடிப்படைகளிலும் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அவற்றிலுள்ள செய்திகளை அர்த்தமற்றவையாக்குவதும் முஸ்லிம்களுக்குள் தோன்றிய வழி கேடர்களின் செயல். குறிப்பாக ஹதீஸ்கள் விஷயத்தில் இந்த வழிகேடர்கள் செய்யும் விஷமம் அதிகம். தற்காலத்தில் நமது தமிழகத்தில் தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கெல்லாம் தலைமை தாங்குவதாக சொல்லிக்கொள்ளும் சிலரும் ஹதீஸ்கள் விஷயத்தில் இத்தகைய விஷமத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை குர்ஆனுக்கும் அறிவுக்கும் முரண்படுவதாக சித்தரித்து அவற்றை மறுப்பதும் கேலி கிண்டல் செய்வதும் இவர்களின் வழிகேட்டுக்கு தெளிவான ஆதாரமாகும்.

Saturday, July 20, 2013

அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 

இஸ்லாமியப் பெண்களுக்கு இபாதத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதிலும் குறிப்பாக நோன்பு நோற்பதில் அளப்பரிய அக்கறை உண்டு. ரமழானுக்கு முன்னரே இல்லங்களைக் கழுவி தூய்மைப்படுத்தி, நோன்பிற்கும் அதனோடு ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் தம்மைத் தயார் படுத்திக் கொள்வர். இத்தகைய சகோதரிகளுக்காக நோன்பு நோற்பதுடன் தொடர்புபட்ட சில சட்டங்களை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன்.

(ஒரு வரலாற்றுத் துரோகம் வெளிவருகிறது)

M S. ரஹ்மத்துல்லாஹ்                                         
கேள்வி:
ஸாலிம்(ரழி) அவர்களுக்கு ஸஹ்லா(ரழி) அவர்கள் பால் கொடுத்தார்கள் என்று ஹதீஸ் கூறுகின்றது. இந்த ஹதீஸை மறுப்பவர்கள் பின்வருமாறு வாதிக்கின்றனர். ஒரு பெண்ணின் மார்பகத்தில் பால் வரவேண்டும் என்றால் அவளுக்கு சிறு குழந்தை இருக்க வேண்டும். ஸாலிம்(ரழி) அவர்களுக்கு பால் புகட்டும் போது ஸஹ்லா(ரழி) அவர்களுக்குக் கைக்குழந்தை இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. கைக்குழந்தை இல்லாத போது அவர்கள் எப்படி பால் கொடுத்தார்கள்?
இந்த வாதத்தின் உண்மை நிலை என்ன? இதற்கான தெளிவை உண்மை உதயத்தின் மூலமாக எதிர்பார்க்கின்றேன்.

Saturday, June 15, 2013

இன்று SLTJ என்ற ஒரு சிறு கூட்டம் பிஜே அவர்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டு இலங்கை மக்களையும் வழிகேட்டின் பால் அழைத்துக் கொண்டிருக்கின்றனா். சூனியம் பற்றிய தெளிவின்மையே இச்சிறு குழுவின் வழிகேட்டுக்கு முக்கிய காரணமாகும். அல்குர்ஆன் சுன்னாவின் ஒளியில் சூனியம் பற்றிய ஐயங்களுக்கு பதிலளிக்கும் பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றினை இன்று 15.06.2013 சனிக்கிழமை மாலை 4.00 மணி தொடக்கம் மாளிகைக்காடு அல்ஹூசைன் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற முழுமையான ஏற்பாடுகள் சாய்ந்தமருது அல்இஸ்லாஹ் ஜூம்ஆ பள்ளிவாசலினால் செய்யப்பட்டுள்ளன. சந்தேகத் தெளிவுக்கு சரியானதோர் சந்தா்ப்பம். சந்தா்ப்பத்தைத் தவறவிடாதீா்கள். ஐயங்களுக்கான தெளிவினை வழங்குகின்றார் உண்மை உதய இஸ்லாமிய சஞ்சிகையின் ஆசிரியா் அஷ்ஷெய்க் SHM. இஸ்மாயீல் ஸலபி அவா்கள்.

Tuesday, April 16, 2013

இன்று SLTJ என்ற ஒரு சிறு கூட்டம் பிஜே அவர்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டு இலங்கை மக்களையும் வழிகேட்டின் பால் அழைத்துக் கொண்டிருக்கின்றனா். சூனியம் பற்றிய தெளிவின்மையே இச்சிறு குழுவின் வழிகேட்டுக்குக் காரணமாகும். எனவே சூனியம் பற்றிய தெளிவினைப் பெற வீடியோவைப் பார்க்கவும்.


PJ என்றழைக்கப்படும் ஜைனுல் ஆபிதீன் அவர்களின் கடந்த கால, இன்றைய நிலைப்பாடு குறித்த ஓர் பார்வை.
தடம் புரண்டவர்கள் யார் என்று நீண்ட பட்டியலை வெளியிட்டு தாங்கள் மட்டுமே அன்று முதல் இன்று வரை ஒரே கொள்கையில் உறுதியாக இருப்பதாக தம்பட்டம் அடிக்கும் மவ்லவி பீ. ஜைனுல் ஆபீதீன் அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் காலஓட்டத்திற்கேற்ப எவ்வாறு தங்களது கொள்கைகளை சட்டையை மாற்றுவது போன்று மாற்றியுள்ளார்கள் என்பதனை பீ.ஜைனுல் ஆபிதீன் கடந்த காலத்தில் ஏழுதியவைகளிலிருந்து அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் இஸ்மாயீல் ஸலபி அவர்கள் வெளியிடுகின்றார்கள் – விரிவான விளக்கத்திற்க்கு வீடியோவை பார்வையிடவும்
வழங்குபவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
நாள்: 9-11-2012,
இடம்: செல்லா ராவுத்தர் திடல் சாரமேடு கோவை
நிகழ்ச்சி ஏற்பாடு: JAQH கோவை மாவட்டம்


Popular Posts