|
அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 1)
குறிப்பு: சகோதரர் பீஜே அவர்கள் தனது தர்ஜமாவில் மறுத்துள்ள நான்கு ஹதீஸ்கள் தொடர்பான உண்மை நிலையை விளக்கும் எண்ணத்துடன்தான் ‘மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்’ தொடரை நாம் எழுதினோம். அதன் முதல் கட்டமாக எழுதப்பட்ட சூனியம் தொடர்பான ஹதீஸ் குறித்த எமது தொடர்தான் முற்றுப் பெற்றது. அடுத்த பகுதியை நாம் இப்போது ஆரம்பித்துள்ளோம்.
|
.
Wednesday, October 3, 2012
Tuesday, October 2, 2012
அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி
சூனியம் – தொகுப்புரை
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்பதற்காகச் சகோதரர் பீஜே முன்வைக்கும் வாதங்களுக்கான மறுப்பை இது வரை பார்த்தோம். இந்தத் தொடரின் இறுதி அங்கமாக அவரது ஆக்கத்தின் முடிவு குறித்தும், நமது கட்டுரையின் தொகுப்புக் குறித்தும் இத்தொடரில் நோக்குவோம்.
|
Monday, October 1, 2012
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இலங்கையின் அனைத்துப் பகுதியிலிருந்தும் சாரை சாரையாக வந்து பங்கேற்று மிக வெற்றிகரமாகவும், பிரயோசனமிக்கதாகவும் நடந்து முடிந்த இலங்கை ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஆறாவது தேசிய இஸ்லாமிய மாநாடு அயோக்கியர்களையெல்லாம் ஒரு கனம் ஆட வைத்தது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக காதியானிகள், முஃதஸிலாக்கள், முர்ஜிஆக்கள் போன்ற வழிகெட்ட கூட்டங்களின் கொள்கைகளில் சிலவற்றைத் தொகுத்தெடுத்து அதைத் தங்களது கொள்கையாகக் கொண்டு தவ்ஹீத் சாயத்தையும் அதற்குப் பூசி மக்களை வழிகெடுக்கும் முயற்சியில் மிக அண்மைக்காலமாக மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ரவுடிகளான SLTJ எனும் பெயரில் இயங்கும் காடையர்களை இம்மாநாடு கதிகலங்க வைத்தது என்றே சொல்ல வேண்டும்.
Tuesday, September 11, 2012
மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலபி
ஹதீஸில் முரண்பாடா?
‘நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது’ என்ற ஆதாரபூர்வமான அறிவிப்பை ‘அல்குர்ஆனுக்கு முரண்படுகின்றது’ என்று கூறி, சகோதரர் மறுத்து வருகின்றார். இவர் கூறும் காரணம் தவறானது என்பதை இதுவரை நாம் ஆராய்ந்தோம். ‘குறித்த இந்த ஹதீஸிற்குள்ளேயே முரண்பாடு இருக்கின்றது’ என்ற மற்றுமொரு வாதத்தையும் இந்த ஹதீஸை மறுப்பதற்குத் துணையாக முன்வைக்கின்றார். |
Monday, September 10, 2012
மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலபி
இஸ்லாத்தின் எதிரிகள் நபி(ஸல்) அவர்களை மஸ்ஹூர் – சூனியம் செய்யப்பட்டவர் என விமர்சித்துள்ளனர். அப்படி விமர்சித்தவர்களைக் குர்ஆன் அநியாயக்காரர்கள் என்று கூறுகின்றது. இதன் மூலம் அவர்களது விமர்சனம் அல்லாஹ்வால் மறுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக ஹதீஸ் கூறுகின்றது. எனவே இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தோரணையில் வாதித்து சகோதரர் ஹதீஸை மறுக்கின்றார்.
இந்த வாதம் தவறானதாகும். இந்த வாதத்தை முன்வைப்பதன் மூலம் சகோதரர் தனக்குத் தானே முரண்படுகின்றார்.
|
Sunday, September 9, 2012
9:17 PM
Aboo Hanan Salafy
கட்டுரை
No comments
கற்றலின் முழுமையான பலனே கற்பித்தலில்தான் உள்ளது. கற்பித்தல் இல்லாத கற்றல் வீணானது. எனவேதான் நபி நாயகம் (ஸல்) அவர்கள் யார் குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுக் கிறாரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று கூறினார் கள்.
நபி (ஸல்) அவர்களை இந்த உலகிற்குத் தான் அனுப்பி வைத்ததற்கான நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது, “அவனே எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயத்தில் இருந்து ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களை கூறிக் காண்பித்து அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழிகேட்டில் இருந்தனர். (62:2) என்றும்,
Saturday, September 8, 2012
அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருந்தால் அதைக் காபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள். அப்படி விமர்சனம் செய்ததாக எந்தத் தகவல்களும் இல்லை. எனவே, விமர்சனம் இல்லை என்பதே நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவில்லை என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றது என்ற அடிப்படையில் சகோதரர் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுக்கின்றார்.
உள்ளதை வைத்து விமர்சனம் செய்வதுதான் நியாயமான விமர்சனமாகும். ஆனால், அவர் இந்த வாதத்தை பல்வேறுபட்ட மிகைப்படுத்தல்கள் செய்து ஹதீஸில் கூறப்படாத செய்திகளை மேலதிகமாக இணைத்தே வலுப்படுத்த முனைகிறார்.
|
அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி
பாதுகாக்கப்பட்ட இறைவேதம்
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை ஏற்றுக்கொண்டால் குர்ஆனின் நம்பகத் தன்மையில் அது சந்தேகத்தை ஏற்படுத்தி விடும் என்ற வாதத்தை முன்வைத்து பிஜே அவர்கள் அது பற்றிய ஸஹீஹான ஹதீஸை மறுக்கின்றார். அவர் முன்வைக்கும் வாதத்தின் போலித் தன்மையையும், அவர் தனக்குத் தானே முரண்படும் விதத்தையும், தனது வாதத்தை நிலைநிறுத்துவதற்காக ஹதீஸில் கூறப்பட்டதற்கு மாற்றமாக மிகைப்படுத்தும் அவரது போக்கையும், குர்ஆன் தொகுப்பு வரலாற்றில் குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வண்ணம் அவர் கூறியுள்ள கருத்துக்கள் பற்றியும் இந்தத் தொடரில் விரிவாக அலசுவோம்.
பிஜே தர்ஜமா: பக்கம்-1296
Saturday, August 18, 2012
3:24 PM
Aboo Hanan Salafy
சமூக சேவை
No comments
ஜம்இய்யது அன்சாரிஸ் சுன்னத்தில் முகம்மதிய்யாவி (JASM) ன் சமூகப்பணித் தொடரில் 18.08.2012 சனிக்கிழமை அன்று உலர் உணவு விநியோகிக்கப்பட்டது. கடந்த சுனாமியால் முழுமை யாகப் பாதிக்கப்பட்டு இது வரை வீடுகள் எவராலும் வழங்கப்படாத நிலையில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலின் பின்னால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் சுமார் 8 வருடங்களாக பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கே புனித நோன்புப் பெருநாளை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு 1500 ரூபா பெருமதியான இவ்உணவுப் பார்சல்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்து லில்லாஹ்.
Monday, August 6, 2012
(ஈதுல் பித்ர்) புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் சரியாக காலை 6.30 மணிக்கு சாய்ந்தமருது, கடற்கரை வீதி கமு றியாழுல் ஜன்னா வித்தியாலய முன்பாக அமைந்துள்ள கடற்கரை மைதானத்தில் சாய்ந்தமருது அல்-இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. சகல பொதுமக்களும் (ஆண்களும் பெண்களும்) வுழூச் செய்து கொண்டு நேரகாலத்தோடு முஸல்லாவுடன் சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முகம்மதிய்யா கல்முனைக் கிளை (முகம்மதி ஜூம்ஆப் பள்ளிவாசல்) ஏற்பாட்டில் கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஜமாஅத் திடலில் இன்ஷா அல்லாஹ் காலை 6.45 மணிக்கு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நபிவழியில் எமது பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிட அனைவரும் ஒன்று குழுமுவோம்.
Saturday, August 4, 2012
11:11 AM
Aboo Hanan Salafy
விமர்சனங்கள்
No comments
அண்ணன் பிஜேயின் தவறான வாதங்கள் அவ்வப்போது பலராலும் ஆதார பூர்வமாக எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதே விடயங்களை அலாதியாக நானும் எழுத வேண்டிய தேவை கிடையாது. SLTJ கல்முனை என்ற கும்பல் கல்முனை JASM பற்றி விட்ட கதையளப்புகளையும் பொய்யையும் வெளிக்காட்டுவதே நமது நோக்கமாகும். யார் எதைச் சொன்ன போதிலும் சரியே. அல்குர்ஆனுக்கு ஆதார பூர்வமான ஹதீஸ் ஒரு போதும் முரண்படாது அது முரண்பாடாக நமக்கு தோன்றினாலும் கூட என்பவை பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளது.
Friday, August 3, 2012
3:21 PM
Aboo Hanan Salafy
கட்டுரை
No comments
அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-3)
அஷ்ஷெய்க S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
குர்ஆன், சுன்னா இரண்டுமே வஹி எனும் வேத வெளிப்பாடு. இரண்டும் அல்லாஹ்விடமிருந்து பெறப்பட்டவையே. எனவே இரண்டுக்குமிடையில் முரண்பாடு இருப்பது போல் தோன்றினால் நமது அறிவில்தான் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். ஹதீஸில் ஒரு நாளும் கோளாறு இருக்காது. நாம் புரிந்து கொண்டதில் எங்கோ ஒரு இடத்தில் தவறு விட்டிருப்போம். எனவே, குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸும் முரண்படுவது போல் தோன்றினால் இரண்டுக்குமிடையில் இணக்கம் காண முயற்சிக்க வேண்டும். முடியாமல் போனால் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்தது. எனவே, இரண்டையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் என நம்ப வேண்டும்.
2:46 PM
Aboo Hanan Salafy
கட்டுரை
No comments
அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-1)
அஷ்ஷெய்க S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
2:37 PM
Aboo Hanan Salafy
கட்டுரை
No comments
அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-2)
அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
அல் குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை. அப்படிமுரண்பாடுகள் இருந்தால் அது இறை வேதமாகவும் இருக்க முடியாது என அல் குர்ஆனே கூறியுள்ளது. அல் குர்ஆனில் சில வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்போல் தோன்றுகின்றன. அவற்றை ஆழமாக அவதானித்துப் பார்த்தால் அவற்றுக்கிடையேமுரண்பாடு இல்லையென்பதை உணர்ந்து கொள்ளலாம். அப்படி உணர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் இரண்டும் என் இரட்சகனிடமிருந்து வந்தவை என்று ஈமான் கொள்ள வேண்டும்.
Thursday, August 2, 2012
சாய்ந்தமருது அல்மஸ்ஜிதுஸ் ஷரீப் பள்ளிவாசலில் பிரதி சனிக்கிழமை தோறும் அஸர்த் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்று வந்த பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி ரமழான் முடியும் வரை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகின்றது. அவ்வாறே பெண்களின் மார்க்க சம்பந்தமான சந்தேகங்கள் கேள்விப் பெட்டி மூலம் பெறப்பட்டு இரவுத் தொழுகையின் பின் ஒரு நாள் விட்டு ஒரு நாள் விளக்கம் அளிக்கப்படுகின்றது. இரவுத் தொழுகையின் போது பெண்கள் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேள்விப் பெட்டியினுள் உங்களது மார்க்க சம்பந்தமான சந்தேகங்களையும் நீங்கள் எழுதிப் போட்டு இஸ்லாமிய விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
Subscribe to:
Posts (Atom)










.jpg)

