.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Sunday, September 9, 2012


கற்றலின் முழுமையான பலனே கற்பித்தலில்தான் உள்ளது. கற்பித்தல் இல்லாத கற்றல் வீணானது. எனவேதான் நபி நாயகம் (ஸல்) அவர்கள் யார் குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுக் கிறாரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று கூறினார் கள்.

நபி (ஸல்) அவர்களை இந்த உலகிற்குத் தான் அனுப்பி வைத்ததற்கான நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது, “அவனே எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயத்தில் இருந்து ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களை கூறிக் காண்பித்து அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும்ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழிகேட்டில் இருந்தனர். (62:2) என்றும்,

Saturday, September 8, 2012





 அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருந்தால் அதைக் காபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள். அப்படி விமர்சனம் செய்ததாக எந்தத் தகவல்களும் இல்லை. எனவே, விமர்சனம் இல்லை என்பதே நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவில்லை என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றது என்ற அடிப்படையில் சகோதரர் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுக்கின்றார்.
உள்ளதை வைத்து விமர்சனம் செய்வதுதான் நியாயமான விமர்சனமாகும். ஆனால், அவர் இந்த வாதத்தை பல்வேறுபட்ட மிகைப்படுத்தல்கள் செய்து ஹதீஸில் கூறப்படாத செய்திகளை மேலதிகமாக இணைத்தே வலுப்படுத்த முனைகிறார்.


அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி

பாதுகாக்கப்பட்ட இறைவேதம்
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை ஏற்றுக்கொண்டால் குர்ஆனின் நம்பகத் தன்மையில் அது சந்தேகத்தை ஏற்படுத்தி விடும் என்ற வாதத்தை முன்வைத்து பிஜே அவர்கள் அது பற்றிய ஸஹீஹான ஹதீஸை மறுக்கின்றார். அவர் முன்வைக்கும் வாதத்தின் போலித் தன்மையையும், அவர் தனக்குத் தானே முரண்படும் விதத்தையும், தனது வாதத்தை நிலைநிறுத்துவதற்காக ஹதீஸில் கூறப்பட்டதற்கு மாற்றமாக மிகைப்படுத்தும் அவரது போக்கையும், குர்ஆன் தொகுப்பு வரலாற்றில் குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வண்ணம் அவர் கூறியுள்ள கருத்துக்கள் பற்றியும் இந்தத் தொடரில் விரிவாக அலசுவோம்.
பிஜே தர்ஜமா: பக்கம்-1296

Saturday, August 18, 2012


             ஜம்இய்யது அன்சாரிஸ் சுன்னத்தில் முகம்மதிய்யாவி (JASM) ன் சமூகப்பணித் தொடரில் 18.08.2012 சனிக்கிழமை அன்று உலர் உணவு விநியோகிக்கப்பட்டது. கடந்த சுனாமியால் முழுமை யாகப் பாதிக்கப்பட்டு இது வரை வீடுகள் எவராலும் வழங்கப்படாத நிலையில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலின் பின்னால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் சுமார் 8 வருடங்களாக பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கே புனித நோன்புப் பெருநாளை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு 1500 ரூபா பெருமதியான இவ்உணவுப் பார்சல்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்து லில்லாஹ்.

Monday, August 6, 2012

(ஈதுல் பித்ர்) புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் சரியாக காலை 6.30 மணிக்கு சாய்ந்தமருது, கடற்கரை வீதி கமு றியாழுல் ஜன்னா வித்தியாலய முன்பாக அமைந்துள்ள கடற்கரை மைதானத்தில் சாய்ந்தமருது அல்-இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. சகல பொதுமக்களும் (ஆண்களும் பெண்களும்) வுழூச் செய்து கொண்டு நேரகாலத்தோடு முஸல்லாவுடன் சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முகம்மதிய்யா கல்முனைக் கிளை (முகம்மதி ஜூம்ஆப் பள்ளிவாசல்) ஏற்பாட்டில் கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஜமாஅத் திடலில் இன்ஷா அல்லாஹ் காலை 6.45 மணிக்கு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நபிவழியில் எமது பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிட அனைவரும் ஒன்று குழுமுவோம்.

Saturday, August 4, 2012

அண்ணன் பிஜேயின் தவறான வாதங்கள் அவ்வப்போது பலராலும் ஆதார பூர்வமாக எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதே விடயங்களை அலாதியாக நானும் எழுத வேண்டிய தேவை கிடையாது. SLTJ கல்முனை என்ற கும்பல் கல்முனை JASM பற்றி விட்ட கதையளப்புகளையும் பொய்யையும் வெளிக்காட்டுவதே நமது நோக்கமாகும். யார் எதைச் சொன்ன போதிலும் சரியே. அல்குர்ஆனுக்கு ஆதார பூர்வமான ஹதீஸ் ஒரு போதும் முரண்படாது அது முரண்பாடாக நமக்கு தோன்றினாலும் கூட என்பவை பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளது.

Friday, August 3, 2012


அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-3)

அஷ்ஷெய்க S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
குர்ஆன், சுன்னா இரண்டுமே வஹி எனும் வேத வெளிப்பாடு. இரண்டும் அல்லாஹ்விடமிருந்து பெறப்பட்டவையே. எனவே இரண்டுக்குமிடையில் முரண்பாடு இருப்பது போல் தோன்றினால் நமது அறிவில்தான் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். ஹதீஸில் ஒரு நாளும் கோளாறு இருக்காது. நாம் புரிந்து கொண்டதில் எங்கோ ஒரு இடத்தில் தவறு விட்டிருப்போம். எனவே, குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸும் முரண்படுவது போல் தோன்றினால் இரண்டுக்குமிடையில் இணக்கம் காண முயற்சிக்க வேண்டும். முடியாமல் போனால் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்தது. எனவே, இரண்டையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் என நம்ப வேண்டும்.

அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-1)

அஷ்ஷெய்க S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
 அல் குர்ஆன், ஸுன்னா இரண்டுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். இவை இரண்டும் அல்லாஹ்விடமிருந்து வந்த வேத வெளிப்பாடு (வஹி)யாகும். இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கும் போது அவற்றுக்கிடையே முரண்பாடிருக்க வாய்ப்பேயில்லை. முரண்பாடுஇருப்பதாகத் தோன்றினால் நாம் புரிந்து கொண்டதில்தான் எங்கோ தவறு விட்டிருப்போமே தவிர குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஸிலோ எந்தக் குறைபாடும் இருக்காது. இருக்க வாய்ப்பும் இல்லை. இதுதான் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.

அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-2)

அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
அல் குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை. அப்படிமுரண்பாடுகள் இருந்தால் அது இறை வேதமாகவும் இருக்க முடியாது என அல் குர்ஆனே கூறியுள்ளது. அல் குர்ஆனில் சில வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்போல் தோன்றுகின்றன. அவற்றை ஆழமாக அவதானித்துப் பார்த்தால் அவற்றுக்கிடையேமுரண்பாடு இல்லையென்பதை உணர்ந்து கொள்ளலாம். அப்படி உணர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் இரண்டும் என் இரட்சகனிடமிருந்து வந்தவை என்று ஈமான் கொள்ள வேண்டும்.

Thursday, August 2, 2012

சாய்ந்தமருது அல்மஸ்ஜிதுஸ் ஷரீப் பள்ளிவாசலில் பிரதி சனிக்கிழமை தோறும் அஸர்த் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்று வந்த பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி ரமழான் முடியும் வரை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகின்றது. அவ்வாறே பெண்களின் மார்க்க சம்பந்தமான சந்தேகங்கள் கேள்விப் பெட்டி மூலம் பெறப்பட்டு இரவுத் தொழுகையின் பின் ஒரு நாள் விட்டு ஒரு நாள் விளக்கம் அளிக்கப்படுகின்றது. இரவுத்  தொழுகையின் போது பெண்கள் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேள்விப் பெட்டியினுள் உங்களது மார்க்க சம்பந்தமான சந்தேகங்களையும் நீங்கள் எழுதிப் போட்டு இஸ்லாமிய விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Saturday, July 28, 2012

ஸ்ரீ லங்கா தேவையற்ற ஜமாஅத் (SLTJ) கல்முனை, வழமை போன்று பொய்யைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஏதோ இரண்டு மூன்று தம்பிகள் சேர்ந்து கொண்டு புதிதாக தவ்ஹீத் பேசுகிறார்களாம். தஹபழ் ழமஉ என்ற நோன்பு திறக்கும் துஆவும் மறு ஆய்வில் ழஈபாம். அதைச் சொல்லச் சொல்லி (JASM) கல்முனைப் பள்ளியில் சொன்னார்களாம். அவர்கள் சொல்ல வில்லையாம். நோட்டிஸ் அடித்து விநியோகித்தார்களாம்.

வெட்கம் கெட்டவர்களே! இந்த துஆ ழஈபானது என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்பே JASM சொல்லி வருகின்றது. கல்முனைப் பள்ளி யிலும் பல தடவை சொல்லப்பட்டுள்ளது. முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முனைகிறீர்களே! உங்களது அயோக்கியத் தனத்தை என்னவென்று சொல்வது?

Friday, July 27, 2012


Kfk;kjpa;ah [_k;Mg; gs;spthrypd; Kd; rk;gtk;

= yq;fh jt;`Pj; [khmj; (SLTJ) fy;Kid vd;w ngaupy; ut;bfs; Nghy; rpyh; mz;ikf; fhykhf r%fj;jpy; cyhtp tUfpwhh;fs;. ehfupfkw;w gz;ghLfisAila ,th;fs; MjhuG+h;tkhd `jP];fis jq;fs; rpw;wwpTf;Fg; nghUe;jtpy;iy vd;w fhuzj;jpw;fhf kWj;Jk; tUfpd;wdh;. ,t;thW GfhupapYs;s gy rupahd `jP];fis kWj;jJ kl;Lky;yhJ> egpath;fSf;F #dpak; nra;ag;gl;ljhf Gfhup cl;gl gy fpue;jq;fspy; gjpthfpAs;s `jPijAk; ,th;fs; kWg;gJld; ,e;j `jPi] ek;GNthh; K\;upf;Ffs; vd gj;th NtW nfhLj;J tUfpwhh;fs;.

Friday, July 13, 2012

இன்ஷா அல்லாஹ் ரமழான் ஆரம்பம் முதல் இறுதி வரை இரவுத் தொழுகை இரவு 8.30 மணிக்கு சாய்ந்தமருது மாளிகா வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுஷ் ஷரீப் பள்ளிவாசலில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
சூனியம் என்றொரு கலை உள்ளது. அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. சூனியத்தைக் கற்பது, கற்பிப்பது, செய்வது, செய்விப்பது அனைத்துமே குப்ரை ஏற்படுத்தும் கொடிய குற்றங்களாகும். அல்லாஹ்வின் நாட்டமின்றி சூனியத்தினால் யாரும் யாருக்கும் எவ்விதத் தீங்கையும் ஏற்படுத்திவிட முடியாது என்பது அஹ்லுஸ் சுன்னாவின் அகீதாவாகும்.

Popular Posts