அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் இரு விரிவுரையாளர்கள் கடந்த 28.11.2012ல் பிரியாவிடை பெற்றுச் சென்றனர். அவர்களது பிரியாவிடை வைபவம் கலாபீட மண்டபத்தில் வெகு விமர்சையாக நடந்தேரியது. கலாபீடத்தின் மாணவப் பேரவையும், விரிவுரையாளர் குழாமும் இவ்விழாவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
உடற்கல்வி விரிவுரையாளரான ஜனாப். எஸ்.எம். அப்துல் ஜிப்ரி (B.A. Hon.,Sp.ph.Ed), விஞ்ஞான விரிவுரையாளரான ஜனாப் M.I.M. அஹ்மட் ஹூஸைன் (Bsc.,Msc.,PGDE.,MED.) ஆகிய இரு விரிவுரையாளர்களுக்குமே இப்பிரியாவிடை வைபவம் நடந்தேறியது.