N K.அப்துல்லாஹ்
இஸ்லாத்தின் அடிப்படைகள் குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸும், இவ்விரு அடிப்படைகளிலும் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அவற்றிலுள்ள செய்திகளை அர்த்தமற்றவையாக்குவதும் முஸ்லிம்களுக்குள் தோன்றிய வழி கேடர்களின் செயல். குறிப்பாக ஹதீஸ்கள் விஷயத்தில் இந்த வழிகேடர்கள் செய்யும் விஷமம் அதிகம். தற்காலத்தில் நமது தமிழகத்தில் தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கெல்லாம் தலைமை தாங்குவதாக சொல்லிக்கொள்ளும் சிலரும் ஹதீஸ்கள் விஷயத்தில் இத்தகைய விஷமத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை குர்ஆனுக்கும் அறிவுக்கும் முரண்படுவதாக சித்தரித்து அவற்றை மறுப்பதும் கேலி கிண்டல் செய்வதும் இவர்களின் வழிகேட்டுக்கு தெளிவான ஆதாரமாகும்.