- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
அபூஹுதைபா, ஸஹ்லா தம்பதிகள் ஸாலிம் என்ற ஒரு சிறுவரைத் தமது வளர்ப்புக் குழந்தையாக வளர்த்து வந்தார்கள். ஸாலிம் என்பவர் அபூஹுதைபாவின் மகன் என்றே அழைக்கப்பட்டு வந்தார். அல்குர்ஆன் இந்த உறவு முறையைத் தடுத்த போது ஸாலிம் இளைஞராக இருந்தார். அவர்கள் ஸஹ்லா அதாவது, அவரது முன்னைய நாள் வளர்ப்புத் தாயார் சாதாரண ஆடையுடன் இருக்கும் போது உள்ளே வந்து செல்வதால் அபூஹுதைபாவின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அது பற்றி ஸஹ்லா (ரழி) அவர்கள் நபி(ச) அவர்களிடம் வினவிய போது ஸாலிமுக்குப் பாலூட்டுமாறும், அதன் மூலம் தாய்-மகன் உறவு ஏற்பட்டுவிடும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். அவரும் அப்படிச் செய்தார் என புஹாரி, முஸ்லிம் உட்பட பல ஹதீஸ் நூற்களில் ஆதாரபூர்வமான ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.